வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயி ரிழப்பு!!

1079

இளைஞன் உயி ரிழப்பு..

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று(22.07) அதிகாலை வவுனியாவிலிருந்து சென்ற புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயி ரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் பேருந்துகள் தரிப்பிடத்தில் பேருந்துகளில் சுத்தம் செய்து வந்த மதுஷான் திலிந்த ஜெயவீர என்ற கல்கமுவ பகுதியைச் சேந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு புகையிரதத்தில் மோதி உயி ரிழந்துள்ளளார்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் அல்லது புகையிரதக்கடவையில் படுத்துறங்கியிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது சடலம் புகையிரதக்கடவைக்கு அருகே காணப்படுகின்றது சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் விபத்தா? அல்லது த ற்கொ லையா? என தெரியவரவில்லை. மேலதிக விசாரணகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.