இளைஞன் பலி
காலி போப்பே பாதுகாப்பற்ற ரயில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயி ரிழந்துள்ளார். அந்த இளைஞன் பயணித்த மோட்டார் வாகனம் பெலிஅத்தேயில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
காலி ரிச்மன்ட பிரதேசத்தை சேர்ந்த புத்திக்க மனோஹர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் காலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, விபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள இருந்த பாதுகாப்பு கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.