இரு தரப்பினருக்கு இடையில் மோ தல் : துண்டாகி போன நாக்கை தேடும் பொலிஸார் : ஆபத்தான நிலையில் மூவர்!!

1026

நாக்கை தேடும் பொலிஸார்..

இரத்தினபுரியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோ தல் காரணமாக வன் முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரக்வானை பகுதியில் இரண்டு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது நபர் ஒருவரின் நாக்கை மற்றொருவர் கடித்து துண்டாக்கியுள்ளார்.

மோ தலின் போது கத் தியால் குத் தப்பட்ட நிலையில் மூவர் பொத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஆபத்தான நிலையில் இருந்தமையினால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாக்கை கடி த்து துண் டாக்கிய நபர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துண்டாகிய நாக்கு பகுதி தேடப்பட்ட போதிலும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாக்கை கடித்த நபர் அதனை விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தனது நாக்கை இழந்துள்ளார். குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.