அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் அரசாங்கம்!!

322

அரசாங்க ஊழியர்களுக்கு..

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சம்பள உயர்வு ஜூலை மாதத்திலிருந்து உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

இதற்கென 2700 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்கும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு என்பவற்றுக்கு 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.