நித்யானந்தாவின் சீடரானார் ரஞ்சிதா!!

604

Nithiyanandaநடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை பெற்று நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் இருந்ததாக காணொளி ஒளிபரப்பானது.

இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

தீட்சை பெற்ற ரஞ்சிதா நிரூபர்களிடம் பேசுகையில், சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன் என்றும் எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் கமெராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் கமராவை திருப்பி கொடுத்துள்ளனர்.