யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம்!!

213

ஏற்பட்ட விபரீதம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. மானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் இந்த பகுதியில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மின்னலினால் வேனில் இருந்த அனைத்து பொருட்களும் கருகியுள்ளது.

வீட்டு உரிமையாளர் தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் முடியாமல் போயுள்ளது.

வேனில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கர வண்டிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.