பேருந்து தரிப்பிடத்தில் உறங்கிய நபர் கொ டூரமான முறையில் கொ லை!!

658

கொ டூரமான முறையில் கொ லை

கலேவெல, கலாவெவ சந்தியில் சிறிய பேருந்து தரிப்பிடத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர், இன்று அதிகாலை 2.30 அளவில் மிகவும் கொ டூரமான முறையில் கொ லை செய்யப்பட்டுள்ளதாகவும் கொ லை செய்யப்படுவதை இரண்டு பேர் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான காட்சிகள் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளதாக கலேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கலேவெல நகரில், வர்த்தக நிலையங்களில் கூலி தொழில் செய்து, நகர மத்தியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த, ரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரை தாக்கியதாக கூறப்படும் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தம்புள்ளை பேருந்து நிலையத்தின் நேர குறிப்பாளரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் தலையில் காயம் இருப்பதால், அவர் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.