பலாங்கொடை இந்துக்கல்லூரி மாணவியின் வரலாற்று சாதனை!!

490

மாணவியின் வரலாற்று சாதனை

சப்ரகமுவா மாகாணம் – இரத்தினபுரி, பலாங்கொடையில் அமைந்துள்ள இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு அந்த மாணவி தெரிவாகியுள்ளார். இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவி தனுஜா மாலதி என தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.