காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற பிரபல குழந்தை நட்சத்திரம் பரிதாப மரணம்!!

235

குழந்தை நட்சத்திரம்

கேரளாவில் கடும் காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டு வந்த பிரபல குழந்தை நட்சத்திரமான ஆருணி எஸ்.குருப் மரணமடைந்துள்ளார். டிக்டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் ஆருணி எஸ்.குருப், 9 வயதான இவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

தன்னுடைய நடிப்பாலும், குழந்தை தனத்தாலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் ஆருணி. இந்நிலையில் கடும் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கண்டறியப்படாத மூளை நோயினால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார். இவரது மரணம் அவரது குடும்பத்தார் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.