உ யிருக்கு போ ராடிய நிலையில் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி : போரின் அவலம்!!

296

போரின் அவலம்

சிரியாவில் உ யிருக்கு போ ராடிய நிலையிலும் தன்னுடைய தங்கையை காப்பாற்றியுள்ளார் ஐந்தே வயதான ரிஹாம். சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போ ர் நடந்து வருகிறது.

இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொ ல்லப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இட்லிப் மாகாணத்தின் அரிஹா எனும் பகுதியிலுள்ள கி ளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் தாக் குதல் நடத்தின.

இதில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், அம்ஜத் அல் அப்துல்லா என்பவரது வீடு நொறுங்கி போனது. அப்துல்லாவும், அவரது மனைவி ஆஸ்மாவும் சம்பவ இடத்திலேயே ப லியாக, 5 வயது மகள் ரிஹாம் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்தார்.

அப்போதும்கூட தன்னுடைய 7 மாத தங்கை கீழே விழுந்துவிடாமல் இருக்க சட்டையை இறுகப்பிடித்துக் கொண்டிருந்தார். காயங்களுடன் குழந்தை உ யிர் பிழைக்க, ரிஹாம் உயி ரிழந்துள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி வைரலானதுடன் அனைவரின் நெஞ்சையும் பிசைந்துள்ளது.