காட்டு யானைகளின் தொல்லையால் தூக்கமின்றி அச்சத்தில் வாழும் மக்கள்!!

999

யானைகளின் தொல்லை

மட்டக்களப்பு – வவுணதீவு, நெடியமடு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாயி ஒருவரின் தென்னம் தோப்பினை அழித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காட்டு யானைகள் ஏற்படுத்தும் இவ்வாறான அழிவினால் தமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக தமது குழந்தைகளுடன் இரவில் தூக்கமின்றி அச்சத்தில் வாழ்ந்து வருவதாக நெடியமடு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.