போதி தர்மருக்கு நினைவிடம் : ஏ.ஆர்.முருகதாசுக்கு பேஸ்புக் ரசிகர்கள் பாராட்டு!!

299

BOdhiபேஸ்புக்கில் போதி தர்மருக்கு காஞ்சிபுரம் நினைவிடம் அமைக்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டது. பேஸ்புக்கில் இச்செய்தியை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் ஏ.ஆர்.முருகதாசின் 7-ஆம் அறிவு படத்தின் மூலமாகவே போதி தர்மர் தமிழகத்தில் பிறந்தவர் என பரவலாக தெரியவந்ததாக தெரிவித்தனர்.

7-ஆம் அறிவு படத்தில் போதி தர்மர் தமிழகத்தில் பிறந்தவர் என்றும், சுற்றுப்பயணத்திற்காக சீனா சென்ற அவர், அங்கு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து கொண்டிருந்த மக்களை தனது இயற்கை வைத்திய முறையில் குணப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியதாகவும் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே போதி தர்மரை பற்றிய விவரங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த முருகதாசை தான் அனைவரும் பாராட்டவேண்டும் என ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.