குழந்தைகளை காரில் மறந்துவிட்டு வேலைக்கு சென்ற தந்தை : திரும்பி வந்தபோது நடந்த வி பரீதம்!!

337


நடந்த வி பரீதம்



காரில் குழந்தைகள் இருப்பதை மறந்துவிட்டு வேலைக்கு சென்ற தந்தை 8 மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, இரண்டு குழந்தைகளும் இ றந்து கிடந்துள்ள சோக சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.



அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 39 வயது தந்தை தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வீட்டிலிருந்து காரில் கிளம்பியுள்ளார். குழந்தைகள் இருவரும் காரின் பின் இருக்கையில் இருப்பதை மறந்த அவர், நேரடியாக பணிக்கு சென்றுவிட்டார்.




8 மணி நேரம் கழித்து திரும்பியதும், காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். சிறிது தூரம் சென்றதும் எதார்த்தமாக பின் இருக்கையை பார்த்துள்ளார். அப்போது இரண்டு குழந்தைகளும் வாயில் நு ரை தள்ளியபடி கிடந்துள்ளனர். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர், பொலிஸாருக்கு போன் செய்து உதவிகேட்டு க தறியுள்ளார்.


ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குழந்தைகள் இருவரும் உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். வெப்பம் காரணமாக இருவரும் உ யிரிழந்திருக்கலாம் என சந்தேகித்திருக்கும் பொலிஸார், குழந்தைகளின் தந்தையையும் வி சாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.