யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து : உ யிரிழந்தவர்களின் விபரம்!!

766

கோர விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உ யிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. கோர விபத்தில் நல்லூர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 12, 30 மற்றும் 53 வயதான இரு பெண்களும் சிறுமியும் உ யிரிழந்துள்ளனர்.

கல்வியங்காட்டை சேர்ந்த சதாசிவம்(சிறி), சுகி மற்றும் அஜந்தன் கோபிகா ஆகியோர் வாகன விபத்தில் ப லியாகி உள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் தாயும் மகளும், இன்னுமொரு சிறுமியும் உ யிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  கோர விபத்து

கோர விபத்து