மீண்டும் ரிஷாட் பதியுதீன் அமைச்சராக

ரிசாட் பதியுதீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொழுத்தி கொண்டாடினர்.

உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தா க்குதலையடுத்து அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லீம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்தே வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.





