பதவியாவில் இடம்பெற்ற விபத்தில்..

பதவியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 மாத குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (29.07.2019) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம், பதவியா பிரதான வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் அதே வீதி வழியாக எதிர்த்திசையில் வந்த வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும், 6 மாத குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாகவே அனுராதபுரம், கல்கடவெல, தீபத்துகம பகுதியைச் சேர்ந்த இசுற செத்சிறு என்ற 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததுள்ளது.

குழந்தையின் தாயாரான 29 வயதான ஹங்கனி சமன்திலக படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பதவியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.





