யாழ். கீரிமலையில் இருந்த மிகப்பெரிய மாடு உ யிரிழப்பு!!

678

யாழ். கீரிமலையில்..

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக உ யிரிழந்தது. குறித்த மாடு நேற்று மாலை உ யிரிழந்துள்ளது.

இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனை அங்கு வரும் ஏராளமான அடியவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும். இந்நிலையில் முதுமை காரணமாக இறந்த மாட்டுக்கு சமய முறைப்படி நல்லடக்கம் இடம்பெற்றது.