கா ணாமல்போன மீனவரின் ச டலம் மீட்பு!!

535

ச டலம் மீட்பு

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுக்கு ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகு நீரில் மூழ்கி கடலில் கா ணாமல் போன மீனவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவரின் ச டலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்ட மீனவர் வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த பாலசிங்கம் பரமானந்தம் என்ற 28 வயதுடையர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 26ஆம் திகதி இலங்கைத்துறை முகத்துவாரக் கடலில் இருந்து படகொன்றில் ஏழு மீனவர்கள் பயணித்துள்ளனர். இதன்போது அவர்கள் சென்ற படகுக்கு திடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட படகு நீரிழ் மூழ்கியுள்ளது. இதன்போது ஏழு மீனவர்களில் ஆறுபேர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளனர்.

ஒரு மீனவர் கடலில் அள்ளுண்டு கா ணாமல் போயிருந்தார். இந்நிலையில் குறித்த மீனவரை தேடி கடற்படையினரும், பிரதேச மீனவர்களும் மூன்றாவது நாளாக இன்றும் கடலில் தேடுதல் மேற்கொண்ட போதே இவ்வாறு ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

உ யிரிழந்த மீனவரின் ச டலத்தை பிரேத ப ரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.