வவுனியாவில் மூன்று மோட்டர் சைக்கிள்களை திருடிய இருவர் கைது!!

696

இருவர் கைது

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள்களை திருடியதாக இருவர் வவுனியா பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் இருந்த நோயாளர்களை பார்வையிடுவதற்காக வந்தவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை வைத்தியசாலை முன்பாக நிறுத்தி விட்டு சென்ற நிலையில் 3 ரிவிஎஸ் 50 ரக மோட்டர் சைக்கிள்கள் காணாமல் போயிருந்தன.

இது தொடர்பில் மோட்டர் சைக்கிள் உரிமையாளர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர்.

வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 32 வயதுடைய இரு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட ரிவிஎஸ் 50 ரக மோட்டர் சைக்கிள்கள் மூன்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.