அதிரடிப் படையினர் சோதனை

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று அதிரடிப் படையினரால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டம் இன்று நண்பகல் 3 மணியளவில் ஆரம்பித்துள்ள நிலையில் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதுவரைக் காலமும் அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு இவ்வாறான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.





