வவுனியா கற்குளம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்!!

374

yaanaiவவுனியா கற்குளம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் இவ் யானைகள் மக்களின் வாழ்வாதாரமான விவசாய பயிர்களையும் பயன்தரு மரங்களையும் அழித்துச் செல்வதுடன் மக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன.

எனினும் கடந்தகாலங்களில் தாம் குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையோ அல்லது எந்த வித காட்டு விலங்குகளின் தொல்லையோ இன்றி தாம் வாழ்ந்து வந்ததுடன் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் யானைகள் தென் பகுதியில் இருந்து கொண்டுவந்து விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கும் மக்கள், இப் பிரச்சனைக்கு உரிய அதிகாரிகள் தலையிட்டு தம் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றனர்.