திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

357

முச்சக்கரவண்டி

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

கல்முனை 7 ஹனீபா வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி எரிந்துள்ளது.

முச்சக்கர வண்டி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.