மக்கள் சந்திப்பு

தேர்தலை எ திர்கொள்வது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியினரின் மக்கள் சந்திப்பு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ண தலைமையில் பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியியைச் சேர்ந்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுரத்த இதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு அடுத்து வரும் தேர்தலை வன்னியில் எவ்வாறு எதிர்கொள்வது, புதிய கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் மக்களது பி ரச்சனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதில் பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அதன் கூட்டுக் கட்சிகளில் ஒன்றாகிய ஈரோஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளர், தமிழ் வி டுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சசிதரன்,

ஈரோஸ் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபால, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் வசந்த, மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.




