முல்லைத்தீவு மாணவியின் ம ரணம் தொடர்பில் பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு!!

247

முல்லைத்தீவு மாணவியின் ம ரணம்

முல்லைத்தீவு றோமன் கத்தோலிக பாடசாலையொன்றில் வைத்து உ யிரிழந்த இ.லிந்துசியா மாணவியின் ம ரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி எஸ். லெனின் குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த தரம் 7 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி கடந்த 29.07.2019 அன்று பாடசாலை சென்றுள்ளதோடு, மதியம் 12.30 மணியளவில் பாடசாலையில் வைத்து அவருக்க இழுப்பு (சுவாச நோய்) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் 2 மணியளவிலேயே குறித்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம ரண விசாரணை அதிகாரிகளின் வி சாரணைகளின் முடிவில் மாணவியின் ச டலம் அவரது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலதிக விசாரணைகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

உ யிரிழந்த மாணவியின் ம ரணத்திற்கு பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே காரணமென குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துவரும் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.