நெடுந்தீவு கடலில் மிதந்த வந்த பொதி : மீனவர்கள் செய்த காரியம்!!

334

மீனவர்கள் செய்த காரியம்

வடக்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 36 கிலோ பீடி இலைகளை மீட்ட மீனவர்கள், அதை நெடுந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஒன்றிடம் ஒப்படைத்தனர். கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திலுள்ள சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 31ம் திகதி கச்சத்தீவு மற்றும் வடக்கு கடல்களில் கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கடற்படையினர் 50 கிலோ கிராம் பீடி இலைகளைக் கண்டெடுத்தனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை மேற்கொண்ட ரோந்துகளுக்கு ஆதரவாக மீனவ மக்கள் வழங்கிய இந்த இயற்கையின் நேர்மறையானதொரு பங்களிப்பு என்பதால், அவர்கள் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கு வழி வகுப்பார்கள் என நம்பப்படுகின்றது.

இதேவேளை, கடலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.