கட்டுநாயக்கவுக்குள் சிக்கிய தங்கக் குவியல் : மிரண்டு போன அதிகாரிகள்!!

219

தங்கக் குவியல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப் பெரிய தங்க சங்கிலிகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கொண்டு வந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு கிலோவுக்கும் மேற்பட்ட தங்க சங்கிலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி இரண்டு கோடி 80 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கல்கிஸ்ஸ, நிட்டம்புவ, கம்பஹா, கிரிதிவே மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக் நகரத்தில் இருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில் இந்த சங்கிலி கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்தவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுநாயக்க சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் இதுவே மிகப்பெரிய சங்கிலிகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.