க.பொ.த சா.த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்!!

598

OLநடந்து முடிந்த க.பொ.த சா.த பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல்கட்டப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.103 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 7ம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப்பணிகள் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜனவரி 14 முதல் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 79 பாடசாலைகள் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 8ம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.