இளைஞன் ப லி

வவுனியா செட்டிகுளம் கல்லாறு அருவித்தோட்டம் சந்தியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவர் ப டுகாயமடைந்ததுடன் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிவருகையில், செட்டிகுளம் பகுதியில் இருந்து மெனிக்பாம் நோக்கி சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மெனிக்பாமை சேர்ந்த சுப்ரமணியன் தனுஜன் என்ற 19 வயது இளைஞன் ப லியாகியுள்ளார். அத்துடன் அதே பகுதியை சேர்ந்த மூவர் ப டுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




