மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ச டலமாக மீட்பு!!

572

குடும்பஸ்தர் ச டலமாக மீட்பு

மட்டக்களப்பு, டச்பார் பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆணொருவரின் ச டலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்துவாரம், பாலமீன் மடு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய நற்குணம் சகாயநாதன் என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் மீன்பிடிக்க படகில் சென்றிருந்த நிலையில் இன்றையதினம் வாவிக்குச் சென்ற மீனவர்களால் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த மீனவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.