உயர்தரப் பரீட்சை

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாயிரத்து 512 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இப் பரீட்சைக்காக 33 பரீட்சை நிலையங்களும் 9 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாயிரத்து 512 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கு இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மாணவர்களது அடையாள அட்டையை பார்வையிட்ட பின்னர் பரீட்சை மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தனர். அத்துடன் அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெறுகிறது.





