மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன் கைது!!

423

Abuseகொல்கத்தா ரெயில் நிலையம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த காமக்கொடூரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக் கொண்டு, வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அவர்கள் தரும் சில்லரை காசுகளை சேர்த்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் ஏதாவது வாங்கி சாப்பிட்டு, ரெயில் நிலையத்தின் அருகில் இருக்கும் நடைபாதையில் படுத்துறங்கி அந்த பெண் காலம் கடத்தி வந்தார்.

இவர் தனியாக உறங்குவதை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்த ஒருவர், நேற்று முன்தினம் இரவு மக்கள் நடமாட்டாம் அடங்கிய வேளையில் குறித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்னை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.

மறுநாள் அதிகாலை, ஆடைகள் ஏதுமின்றி அந்த பெண் அலங்கோல நிலையில் அழுதுக் கொண்டிருந்த பரிதாப காட்சியை அவ்வழியே சென்ற சிலர் கண்டு திடுக்கிட்டனர்.

இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த உல்ட்டடங்கா பொலிஸார், வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையம் அருகே நடைபாதைகளில் படுத்துறங்கும் சிலரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் புத்தி சுவாதீனம் அற்றவள் என்றுகூட பரிதாபம் பார்க்காமல், அந்த பெண்ணை கற்பழித்த காமக்கொடூரனை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.