வவுனியாவில் ஆடிச் செவ்வாயை முன்னிட்டு விசேட பூஜை!!

548

விசேட பூஜை

இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடிச் செவ்வாயை முன்னிட்டு நேற்று இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது. வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு ஞானஸ்வரக் குருக்கள் தலைமையில் கருமாரி அம்மனுக்கு விசேட அபிஷேகம், தீபராதனைகள் இடம்பெற்று பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது யாகம் வளர்த்து கருமாரி அம்மனின் அருட்காட்சங்களை வேண்டியதுடன், சாமி உள்வீதி, வெளி வீதி உலா வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு கருமாரி அம்மனின் அருளாசியினைப் பெற்றனர்.