வவுனியாவில் நிற்காமல் சென்ற வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிசார் : விபத்துக்குள்ளான வாகனம்!!

839

விபத்துக்குள்ளான வாகனம்

வவுனியா நைனாமடுவில் நேற்று மாலை மரக்க டத்தலில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் வழிமறித்து கைது செய்துள்ளதுடன் குறித்த முயற்சியும் மு றியடிக்கப்பட்டுள்ளது. மாமடு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மரக்க டத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி சேமமடுவில் இருந்து வவுனியா, பூந்தோட்டம் நோக்கி ச ட்டவிரோ தமான முறையில் பெறுமதிமிக்க முதிரை குற்றிகள் 13 டாட்டா கப் ரக வாகனத்தில் எடுத்துச் செல்கையில் மாமடு பகுதியில் பொலிஸார் வாகனத்தை வழிமறித்த போது வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாக செலுத்தியுள்ளார்.

வாகனத்தை பொலிஸார் விரட்டிச் சென்ற நிலையில் அக்போபுர மாமடு பகுதியில் வாகனம் வீதியோரத்திலுள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தை சோதனை செய்த வேளை முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, சேமமடு, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 33 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் மாமடு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.