புதுமுக நடிகருடன் நித்யாமேனன் காதல்!!

354

Nithya-Menon

நித்யாமேனனுக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை பட நாயகன் கிரிஷ் சாதருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நித்யாமேனன் ஏற்கனவே தமிழில் நூற்றி என்பது, வெப்பம், படங்களில் நடித்துள்ளார். சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.

தொடர்ந்து மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பழைய நடிகை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். தெலுங்கு மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் கதாநாயகனாக கிரிஷ் சதார் நடிக்கிறார். இவர் பழைய மலையாள நடிகை ஜெய பாரதியின் மகன் ஆவார்.

படப்பிடிப்பில் நித்யா மேனனுக்கும் கிரிஷ்க்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் படப்பிடிப்பு ஓய்வில் தனியாக உட்கார்ந்து பேசுவதாகவும் போனில் பேசியும் காதல் வளர்க்கின்றனர் என்றும் கிசு கிசுக்கின்றனர். ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினார்கள். படிப்பிடிப்பு முடியும் தருவாயில் அது காதலாக மலர்ந்துள்ளதாம். இவர்கள் காதல் பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலினி 22 பாளையங் கோட்டை படம் மலையாளத்தில் தயாரான 22 பிமேல் கோட்டயம் என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ஆஷிக் சபுவுக்கும் அதில் நாயகியாக நடித்த ரீமா கல்லிங்கலுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.