தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என அஞ்சலி விளக்கம்!!

321

Anjaliநடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிப்பதை திடீர் என நிறுத்தி உள்ளார். கடைசியாக இவர் நடித்த வத்திக்குச்சி படம் வந்தது. அதன் பிறகு சிங்கம்–2 படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற்போது ஐதராபாத்திலேயே தங்கி உள்ளார்.

சித்தி கொடுமைப்படுத்தியதாக சென்னை வீட்டில் இருந்து வெளியேறிய அவர் அதன் பிறகு மீண்டும் சென்னைக்கு வரவில்லை. தனது வீட்டை அபகரித்து விட்டதாக சித்தி மீது போலீசிலும் புகார் அளித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் மறுத்து விட்டார்.

தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது..

ஆதலால் காதல் செய்வீர் படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. அது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ஆதலால் காதல் செய்வீர் படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை.

இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் என்று அஞ்சலி பேசினார்.