க டத்தப்பட்ட குழந்தை காட்டில் மீட்பு : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

388

குழந்தை காட்டில் மீட்பு

தெனியாய பெவர்லி மாணிக்கவத்தை பிரதேசத்தில் க டத்தப்பட்ட குழந்தை காட்டில் விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது குழந்தையை க டத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

வீட்டில் உள்ள மற்றொரு சிறுமியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமற் போனதாகவும் அயலவர்களின்உதவியுடன் குழந்தையை தேடி கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதியில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தை க டத்திச்செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக, பெற்றோரால் அவசர பொலிஸ் விரிவிற்கு தகவல் கொடுக்கபட்டதையடுத்து தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.