வவுனியா பண்டாரிகுளத்தில் இரு மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

843

விபத்து

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (08.08.2019) காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து பண்டாரிகுளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலிலும் அப்பாதையூடாக எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிலும் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பிளஷர் ரக மோட்டார் கைக்கிலில் பயணித்த 40வயதுடைய பெண்ணும் அவரது 14வயதுடைய பிள்ளையும் காயமடைந்ததுடன் என்.எஸ் ரக மோட்டார் சைக்கிலில் பயணித்த 19வயதுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.