வவுனியாவில் மீண்டும் கடும் காற்று : மேலும் 6 வீடுகள் சேதம்!!

675

மீண்டும் கடும் காற்று

வவுனியாவில் மீண்டும் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக மேலும் 6 வீடுகள் சே தமடைந்துள்ளதாக மாவட்ட அ னர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை மற்றும் இரவு வீசிய கடும் காற்று காரணமாகவே இப் பா திப்புக்கள் ஏற்பட்டன.

அந்தவகையில், வவுனியா பிரதேச செயலக பிரிவில் உள்ள பூவரசன்குளம் பகுதியில் ஒரு வீடும் 4 அங்கத்தவர்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நேரியகுளத்தில் ஒரு வீடும் 5 அங்கத்தவர்களும், குருக்கள் புதுக்குளத்தில் 2 வீடும் 4 அங்கத்தவர்களும், கிறிஸ்தவ குளத்தில் 2 வீடும் 7 அங்கத்தவர்களும் பா திப்படைந்துள்ளனர்.

மேலும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்குணாமடுவில் ஒரு வீடும் 5 அங்கத்தர்வர்களும் என 6 வீடுகளும் 25 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளனர். குறித்த வீடுகளின் கூரைப் பகுதிகளே பகுதியளவில் பாதிப்படைந்துள்ளன.

இதேவேளை, காற்றினைத் தொடர்ந்து இரவு பெய்த மழையின் காரணமாக குறித்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அவர்களது உடமைகள், வீட்டு உபகரணங்கள் மழையில் நனைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.