கதாநாயகி விடயத்தில் அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!!

309

Siva

முதலில் இயக்குனர்கள் சொல்லும் கதை பிடிக்க வேண்டும். அதற்குப் பின் கேட்கிற சம்பளம் தரவேண்டும். அடுத்து தனக்கு யாரை கதாநாயகியாக போடப் போகிறீகள் என்று கேட்டு அந்த நாயகி தனக்குப் பிடிக்கிற லிஸ்ட்டில் இருந்தால் மட்டுமே உடனே ஓகே என்கிறாராம் சிவகார்த்திகேயன்.

அப்படி இல்லை என்றால் அவரின் லிஸ்ட்டை கொடுத்து இதில் எந்த நடிகையும் இருக்கலாம் என்று நிபந்தனை போட்டு அனுப்புகிறாராம். அப்படி அவர் சொல்லும் நடிகைகள் பட்ஜெட் தாங்காது என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

அந்த எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரில்தான் தற்போது நடித்து வரும் மான் கராத்தே படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்து வருகிறார்.