முல்லைத்தீவில் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

272

நேர்ந்த பரிதாபம்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்திற்கு நேற்று மீன்பிடிக்க சென்ற நபர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை குறித்தநபரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் நீரில் மூழ்கி உ யிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனிக்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்