கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து : தாய் மற்றும் மகன் உட்பட மூவர் பலி!!

266

கோர விபத்து

கொழும்பு – கண்டி வீதியின் நிட்டம்புவ – கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நேற்று முன்தினம் (07.08.2019) புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் வேன் சாரதியான திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வேன் ஓட்டுனர், அவரது 47 வயதுடைய தாயார் மற்றும் 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம் வேன் ஓட்டுனரின் தந்தை மற்றும் சகோதரி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை நாளை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.