முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

243

விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குளாய், முகத்துவாரம் பகுதியினைச் சேர்ந்த கடலுணவு கூலர் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் சிலாவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வீதியினை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றில் மோதியுள்ளது.

இதனால், வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.