மட்டக்களப்பு – நாவற்குடா பகுதியில் கோர விபத்து : ஸ்தலத்தில் இருவர் பலி!!

296

கோர விபத்து

மட்டக்களப்பு – கல்முனை வீதி, நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனத்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியமையினால் இன்று காலை இவ்விபத்து நேர்ந்துள்ளது.

சிறிய ரக லொறியில் பயணித்த இருவரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன், இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்தவர்களான, 25 வயதுடைய பதுறுதீன் ஹில்மி ஹசன் மற்றும் 30 வயதுடைய தாவூத் றிழ்வான் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடைய பதுறுதீன் றிஸ்வின் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.