இரண்டரை வயது சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலி!!

291

சிறுமி பரிதாபமாக பலி

நுரைச்சோலை-நாயிப் நகர்-எத்தாலை பிரதேசத்தில் இரண்டரை வயது சிறுமி கிணற்றில் விழுந்து உ யிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வீட்டில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,

 சிறுமி வீட்டுக்கு பின்னால் உள்ள கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் சிறுமியை கிணற்றிலிருந்து மீட்டெடுத்து கல்பிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.