இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை : முழுவிபரம் உள்ளே!!

369

அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 2 ரூபாயில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 138.00 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 163.00 ரூபாயாகும். இதற்கு மேலதிகமாக சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 134 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.