மடு திருத்தல பகுதியில் இருளில் பிரகாசித்த நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளின் ஒளி!!

303

மெழுகுவர்த்திகளின் ஒளி

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற நவநாள் திருப்பலியை தொடர்ந்து இரவு மடு திருத்தலத்தில் மெழுகுவர்த்தி பவனி இடம்பெற்றுள்ளது.

இந்த பவனியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இன்று மாலை வேஸ்பர் ஆராதனையும், நாளைய தினம் காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கேற்க,

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் நூற்றுக்கணக்கான குருக்கள் இணைந்து மடு அன்னையின் திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்க உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவனியும், ஆசியும் இடம்பெறவுள்ளது. மேலும், பாதுகாப்பு நிமித்தம் பொலிஸ், இராணுவம், கடற்படை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.