விபத்து
திருகோணமலை, கந்தளாயில் இன்று அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த டிப்பர் வாகனம் வயல் வெளியில் விழுந்தமையினால் வாகனத்தின் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, படுகாயமடைந்தவர் கந்தளாய், கெமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ரொசான் சிறிமேவன் என தெரியவந்துள்ளது. இவ்விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.