வெளிநாடு செல்ல முயற்சித்த தமிழர்கள்
சட்டவிரோ தமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ச ந்தேகத்திற்குரிய முறையில் சிலர் பயணிப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய ரக லொறி ஒன்றில் சிலாபம், இரணவில வீதியில் பயணித்து கொண்டிருந்த போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆதரவு வழங்கிய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 20 – 40 வயதுடைய தமிழர்களாகும். லொறியின் சாரதி மற்றும் உதவியார்கள் மாரவில மற்றும் தொடுவாவ பிரதேசத்தை சேர்ந்த சிங்களவர்களாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.