4 வயது மகளை பிரித்த சவுதி நீதிமன்றம் : பாசப்போராட்டம் நடத்தும் தாய்!!

310

பாசப் போராட்டம் நடத்தும் தாய்

மேற்கத்திய கலாசாரத்தை காரணம் காட்டி அமெரிக்க தாயிடம் இருந்து 4 வயது மகளை சவுதி நீதிமன்றம் பிரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெத்தானி வியர்ரா (32) கடந்த 2011ம் ஆண்டு உள்ளூர் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்காக மத்திய கிழக்கு நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

அங்கு சவுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் Zaina என்கிற மகள் இருக்கிறார். தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதேசமயம் குழந்தை Zaina யாரிடம் வளர வேண்டும் என்பது குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

பெத்தானியா இஸ்லாமிய அல்லாத வாழ்க்கை முறையை வாழ்ந்து வருவதாக அவருடைய முன்னாள் கணவர் சமூகவலைத்தளத்தில் இருந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார். மேலும், அவருடைய சமூகவலைத்தளத்தில் அதிகமான ஆ பாச படங்கள் இருப்பதாகவும், நமது மதம் மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு மு ரணான பல விடயங்களில் அவர் ஈடுபடுவதாகவும் பெத்தானியாவின் முன்னாள் கணவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.

தனது முன்னாள் கணவர் வாய்மொழியாக து ஷ்பிரயோகம் செய்ததோடு, போ தைப் பொருளைப் பயன்படுத்தி வந்தாலே விவாகரத்து செய்ததாக வியர்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது கணவர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்த நிலையில் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, குழந்தையின் தாய் மேற்கத்திய கலாசாரத்தை சேர்ந்தவர் என்பதால், இளம்வயதிலே குழந்தையும் அந்த முறைக்கு மாறிவிடும் எனக்கூறி பெத்தானியாவின் முன்னாள் கணவரின் தாயிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனை எதிர்த்து பெத்தானியா நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளார். இதற்கிடையில் பெத்தானியாவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த 10 வருடங்களுக்கு அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் வாஷிங்டன் நகரத்தில் வசிக்கும் அவருடைய தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.