பல்கலை மாணவியும் 11 வயது சிறுவனும் தூக்கிட்டு தற்கொலை!!

315

Hangவீரகுல ஆயுர்வேத பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை 9.45 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு இடையிலான காலப்பகுதியில் பல்கலைக்கழக விடுதியில் இம்மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீகலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேவேளை வீரகுல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை உகன பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கழுத்து இறுகிய நிலையில் 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தூக்கிட்டுக் கொண்டமையே கழுத்து இறுகியமைக்கான காரணம் என மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.